தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. ஆனால், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்றும் அதை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் ஏராளமான பள்ளிகள் மேல்முறையீடு செய்தன.
அவற்றின் மேல்முறையீட்டு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதி கோவிந்தராஜன், முதலமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்தார். புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார். பின்னர், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் நீதிபதி கோவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.